மாணவர்களுக்கு பகலுணவு வழங்குவதற்காக நிதியம்

131

பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று தேவையான அளவு உணவு தற்போது கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், 11 இலட்சம் மாணவர்களுக்கு பகல் உணவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். தற்போதும் சில பகுதியிலுள்ள மாணவர்களுக்கு பகலுணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், மாணவர்களுக்கு பகலுணவு வழங்குவதற்காக நிதியம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

 

SHARE