மாலைதீவின் மாலே விபத்தில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு

124

மாலைதீவின் மாலேயில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருந்த குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த இடத்தில் இலங்கையர்கள், இந்தியர்கள் மற்றும் பங்களாதேஷ் தொழிலாளர்கள் குழு ஒன்று தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காணாமல் போயுள்ளனர்.

மீட்பு குழுவினர் அங்கு தங்கியிருந்த 28 பேரை வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் 8 இந்தியர்கள் எனவும் ஒருவர் பங்களாதேஷ் நாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE