இலங்கைக்கு வருபவர்களுக்கு கொவிட் விதிகள் தளர்வு

120

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கொவிட் விதிகள் இன்று (07) முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

கொவிட் பரவுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட சில கொவிட் விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தமக்கு கொவிட் தொற்று இல்லை என்பதை சமர்பிப்பதற்கு PCR பரிசோதனை அறிக்கையை கட்டாயமாக்கும் சட்டம் இன்று முதல் நீக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று முதல் கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியைப் பெற்றதற்கான சான்றிதழ் கட்டாயமில்லை என வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

SHARE