தமிழ் அரசியல்வாதிகளை படுகொலை செய்த கொலையாளி தேர்தலில் போட்டி? ஆதாரங்களுடன் கருணா

358
தமிழ் அரசியல்வாதிகள் பலரைப் படுகொலை செய்த முதல்தரக் கொலைகாரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
karuna-0.bmp.03

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத் ஆகியோரின் படுகொலைகளில் நேரடியாகத் தொடர்புடைய நபருக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவே இந்த தனிநபருக்கு தனது சுயவிருப்பில் இடமளித்திருக்கிறார்.

இந்த முதல் தர கொலைகாரன் பற்றிய உறுதியான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் குறிப்பிட்ட முதல் தர கொலையாளி யார் என்ற விபரத்தை வெளியிடவில்லை.

இதேவேளை, முன்னாள் கிழக்கு முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

தேசியப் பட்டியலில் இடமளிப்பதாக கருணாவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குறுதி கொடுத்திருந்த போதிலும் அவருக்கு அதில் இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE