இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி நேற்று இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்ப்பில் அணித் தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 56, குசல் மென்டிஸ் 52 ஓட்டங்களையும், சரித் அசலங்க 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் உம்ரான் மலிக் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
இந்திய அணிக்கு 207 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்பில் அக்ஷர் பட்டேல் 65 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் தசுன் சானக, கசுன் ராஜித மற்றும் தில்ஷான் மதுசங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். அதனடிப்படையில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியுள்ளது.