வவுனியா, பம்பைமடுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் நோக்கி சென்ற ஆட்டோ மீது மன்னார் வீதியில் இருந்து வவுனியா நோக்கி வந்ம ஹயஸ்ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் வவுனியா, குடியிருப்பைச் சேர்ந்த இ.ஜனாகி (வயது 52) என்பவர் பலியாகியாகியவர் ஆவார். காயமடைந்த 7 பேரும் வவுனியா வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.