கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் நகரசபை முன்னாள் உறுப்பினர் குமரேஸ் தலைமையில் 19.07.2015 அன்று பிரசார கூட்டம் நடைபெற்றது.
இதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, மன்னார் நகரசபை முன்னாள் உபதவிசாளர் ஜேம்ஸ், நானாட்டான் பிரதேசசபை முன்னாள் உபதவிசாளர் றீகன், இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மகேந்திரன் ரகு, யூட் மாஸ்டர், கட்சி தோழர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.