தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தலைவர் பா.சிவனேசன் தலைமையில் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று 09.08.2015 அன்று அட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களான பி.திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன், எம்.திலகராஜ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
கடந்த அரசாங்கத்தில் மலையகத்தில் இருந்த அமைச்சர்கள் போல் அல்லாது தற்போது புதிய அரசாங்கத்தில் மலையக மக்களுக்காக சேவைகளை செய்வதற்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை எனக்கு வழங்கியுள்ளனர். இதனை பயன்படுத்தி மலையக மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றோம்
இதுவரை காலமும் மலையக அரசியல் வரலாற்றில் இந்த தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு புதிய அலையை தோற்றுவித்துள்ளது.
மக்கள் அணிதிரண்டு எமக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஒட்டுமொத்த மலையக மக்களின் அரசியல் பிரதிநிதியாக செயற்பட்டு வந்துள்ளனர். இது அவர்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்தியது என்கின்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல் ரீதியாக அனைத்து மலையக மாவட்ட மக்களுக்கும் குரல் கொடுக்க முடியும். அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட மாவட்ட மக்களுக்கு மட்டுமே சேவையாற்ற முடியும். எனவே நுவரெலியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பணியாற்ற அமைச்சுப்பதவி தேவைப்பட்டது. அதனைப் பெற்றுக்கொண்ட அமைச்சர்களோ வாக்குகளை குறிவைத்த நுவரெலியா மாவட்ட அளவுக்கு ஏனைய பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனவே மலையக மக்கள் சமத்துவமற்ற அபிவிருத்தியையே அடைந்து வந்தனர்.
ஆனால்இ மலையக மக்களுக்கு காணியுரிமையுடனான தனிவீடு எனும் உரிமைக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த போது அரசு அனுமதித்த 300 வீடுகளையும் வாக்கு நோக்கம் கருதி நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் கொண்டு வந்து சேர்க்கவில்லை.
எமது நாட்டில் எந்தெந்த பகுதியில் எல்லாம் மலையக மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்த திட்டம் அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருந்தோம். அதேபோல் இளைஞர் யுவதிகளுக்கும் புதிய ஒரு திட்டத்தை ஆரம்பித்து வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளேன் என்றார்.