196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 8 ஆவது பாராளுமன்றம்….

334

இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நாளை 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்களை சேர்ந்த 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 537 அரசியல் கட்சிகளிலிருந்து 3,653 வேட்பாளர்களும் 36 சுயேச்சை குழுக்களிலிருந்து 2,498 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

SRI-LANKA-ELECTION_3158920k

2014 ஆம் ஆண்டு தேருநர் இடாப்புக்கு அமைய ஒரு கோடியே 50 இலட்சத்து 44,490 வாக்காளர்கள் தமது வாக்குகளை 12,314 வாக்களிப்பு நிலையங்களில் பயன்படுத்தவுள்ளனர்.

வாக்களிப்பு கடமைகளுக்காக 75,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு 195,000 அரச ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் சுமார் 30,000 பேர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE