தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா .சம்பந்தன் இன்று காலை 10 மணியளவில் சென் மேரிஸ் தேசிய பாடசாலைக்கு சென்று வாக்களித்தார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 7.00 மணி முதல் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 4.00 மணியளவில் வாக்களிப்பு நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா, குருணாகல், பதுளை, வடக்கு இடம்பெயர் முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலையிலேயே சில பகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர். 22 மாவட்டங்களில் தேசியப் பட்டியல் உள்ளிட்ட 225 ஆசனங்களை வென்றெடுப்பதற்காக 6451 வேட்பாளர்கள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
12314 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. 15444490 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். பாதுகாப்பு கடமைகளில் 75000 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.