தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா அவர்கள் கொல்லங்கலட்டி தமிழ்க் கலவன் பாடசாலைக்கு குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
கொல்லங்கலட்டியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு மாவை சேனாதிராசா கருத்து தெரிவித்தார்.
எமது தேசத்தின் விடுதலைக்காக நாம் வாக்களித்திருக்கிறோம். மக்கள் அணிதிரண்டு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெற்றியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எமது இனப்பிரச்சினைக்கு தீர்வினையும் எமது காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது அவை தொடர்பிலும் காணாமல் போனோர் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆட்சியமைக்கும் அரசாங்கத்துடன் சுமுகமான தீர்வினை கொண்டு வருவதற்கு நாம் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம்.
பெண்கள் தொடர்பிலான விடயத்தில் அதிகளவாக கவனத்தில் கொள்ளப்படும் வேலை வாய்ப்புக்கள் , பாதுகாப்பு இவற்றில் பேச்சுவார்த்தைகள் நடாத்தவுள்ளோம். வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி எமது சமூகத்தினை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வோம். என்றார்.