பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியளவில் நிறைவுபெற்றுள்ளது.
வாக்கு எண்ணும் பணிகளுக்காக வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குசாவடிகளிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள காமினி சிங்கள மகா வித்தியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 4 தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எலன் மீகஸ்முல்ல தெரிவிக்கின்றார்.
தோ்தல் முடிவுகள் இன்று இரவு 10 மணியிலிருந்து வெளிவரவுள்ளது.
மலையக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்பட்டனா். இன்று பெரும்பாலான தோட்டங்களில் காலையில் வேலைக்குச் சென்று 10.00 மணியளவில் திரும்பி வந்து வாக்களிக்க ஆரம்பித்திருந்தனா்.
இதேவேளை செய்தி சேகரிப்பதற்காக பல பிரதேசங்களுக்கு குறிப்பாக ஹட்டன், தலவாக்கலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, வட்டகொடை ஆகிய பிரதேசங்களுக்கு சென்றிருந்தபோது அதிகமான மக்கள் ஆர்வமாக கடந்த காலங்களை விட இம்முறை வாக்களிக்க வந்திருந்தனா்.
வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அதேவேளை, வன்முறைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை அமைதியான முறையில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)