கிரிக்கெட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐ.சி.சி – உடன் நடைமுறைக்கு வரும் தடை

137

 

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு இன்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”ஒரு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் அந்நாட்டின் அரசு அல்லது அரசியல்வாதிகள் அல்லது அரசாங்க நடவடிக்கைகள் தலையிடக்கூடாது என்பது ஐசிசியின் முக்கியமான விதிமுறையாகும். ஆனால் அதை இலங்கை அரசு மீறி இலங்கை வாரியத்தை கலைத்து தலையிட்டதால் இந்த தடை விதிக்கப்படுகிறது” என கூறியுள்ளது.

மேலும் ”இலங்கை அரசு தலையீடுகள் இல்லாமல் இலங்கை வாரியம் சுதந்திரமாக செயல்படும் வரை இந்த தடை நீடிக்கும்” என்றும் ஐசிசி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE