தென்னிந்திய சினிமாவை பொறுத்துவரை எப்போதும் ஹீரோக்கள் தான் கோடிகளில் சம்பளம் பெறுவார்கள். ஹீரோயின்கள் பெரும்பாலும் லட்சங்கள் தான் வாங்குவார்கள்.
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை எப்போதும் ஹீரோக்கள் தான் கோடிகளில் சம்பளம் பெறுவார்கள்.
ஆனால், சமீபத்தில் பல நடிகைகள் கோடிகளில் சம்பளம் பெற்று வருகின்றனர். இதில் நயன்தாரா, அனுஷ்கா தான் முதலிடத்தில் உள்ளனர். இருவருமே 2 லிருந்து 2.5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகின்றனர். இவை இவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஏற்ப மாறும்.
இதற்கு அடுத்த இடத்தில் பாகுபலி வெற்றியால் தமன்னா தன் சம்பளத்தை ரூ 2 கோடியாக ஏற்ற முடிவு செய்துள்ளாராம். காஜல், ஸ்ருதிஹாசன் ஆகியோர் ரூ 1.5 கோடி வரை சம்பளமாக பெருவதாக கூறப்படுகின்றது.
ஹிந்தி படமான த்ரிஷயம் படத்திற்காக ஸ்ரேயா ரூ 1 கோடி வாங்கியுள்ளார். பாலிவுட் படம் என்பதால் இவருக்கு இத்தனை சம்பளம் என கூறப்படுகின்றது. ஹன்சிகா, சமந்தா ஆகியோர் ரூ 90 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. த்ரிஷா திரைக்கு வந்து 10 வருடங்கள் ஆனாலும் தற்போது ரூ 70 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறாராம்.