நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாடுபூராகவும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களுள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
எனினும் முதற்தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட தொழிலதிபர் கே.கே.மஸ்தான் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிபெற்றுள்ளார்.
இதேவேளை ஐ.ம.சு.மு. சார்பில் வெற்றியீட்டிய ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.