இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(17.12.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த 40 வயதுடைய சிவபாதம் சிவசுதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் தவறான முடிவெடுக்கும் போது அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.