சாதனை படைத்த கில்மிசா! வெடி கொளுத்தி கொண்டாடிய ஊர்மக்கள்

99

 

இறுதிப்போட்டியில் ஈழத்து குயில் கில்மிஷா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ் மக்கள் வெற்றிக்கொண்டத்தில் ஈடுபட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் ஸரிகமப பாடல் போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சன சமூக நிலையத்திற்கு அருகாமையில் வசித்துவரும் கில்மிஷா கடந்த 07.06.2023 அன்று சரிகமப பாடல் போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக இலங்கையில் இருந்து தெரிவுசெய்யப்பட்டார்.

இறுதிச் சுற்று
இப்போட்டியானது இம்முறை லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் பங்கேற்ற குழந்தைகள் தமது திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர்.

17.12.2023 அன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் மொத்தம் 6 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் இறுதிச்சுற்றில் பங்குபற்றினர்.

கொண்டாட்டத்தில் யாழ் மக்கள்
இறுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.

கில்மிஷா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சனசமூக பகுதி மக்கள், வெற்றிக்கொண்டத்தில் ஈடுபட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

SHARE