பூநகரி, நெடுங்குளம் பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற குழியில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
கிளிநொச்சி, பூநகரி நான்காம் கட்டை நெடுங்குளம் பகுதியில் (21-12-2023) நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் சடலம் பூநகரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.