அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில் குஜராத் மாநிலத்தின் வதோதராவை சேர்ந்த மயூஷி பகத் எனும் பெண் காணாமல் போயுள்ளார்.
குறித்த பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு எப் 1 மாணவர் விசாவில் சென்று படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இவர் கடந்த (2019.04.29) திகதி வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளார்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கடந்த (2019.05.01) ஆம் திகதி இதுத்தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அமெரிக்க புலனாய்வு மையம்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க புலனாய்வு மையம், காணாமல் போனவர்கள் பட்டியலில் மயூஷி பெயரை சேர்த்து இருக்கின்றது.
இந்நிலையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு, மயூஷி பகத் இருப்பிடம் குறித்து தகவல் அளித்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் ரூ. 8.33 லட்சம் ஆகும்.