கண்ணீரால் நனைந்த முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்

106

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு மார்கழி 26ஆம் திகதி இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்கள் நினைவாக முல்லைத்தீவில் சுனாமி நினைவேந்தல் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

மத வழிபாடுகள்
காலை 8 மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வில் இந்துமத வழிபாடுகளை முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகர் கிருசாந் நிகழ்த்தினார்.

இஸ்லாமிய மத வழிபாடுகளை முல்லைத்தீவு ஜும்மா பள்ளிவாசல் மௌளவி ஜஸ்மின் நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ மத வழிபாடுகளை மல்லாவி பங்குத்தந்தை பிலீப் அந்தோனி நேசன் குலாஸ் நிகழ்த்தினார.

உணர்வுபூர்வமான அஞ்சலி
பின்னர் மக்கள் தமது உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடர்களை ஏற்றி, கதறி அழுது கண்ணீர் விட்டு தங்களது உணர்வுபூர்வமான அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அரச அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

SHARE