உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த் இன்று காலை காலமானர். நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோடிக்கணக்கில் கொடுத்தாலும் வேண்டாம்
80களில் கோகோ கோலா நிறுவனம் தமிழ்நாட்டில் மார்க்கெட்டை பிடிப்பதற்காக பல முன்னணி ஹீரோக்களை அணுகியது. நடிகர் விஜயகாந்த் 80களில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த நிலையில் அவரை அணுகி இருக்கின்றனர்.
விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் கொடுக்க முன்வந்தாலும், மக்கள் உடல்நலனுக்கு அது ஆபத்து என தெரிந்து விஜயகாந்த் அதில் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டாராம்.
இதை தற்போது கூறி ரசிகர்கள் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை உருக்கமாக பேசி வருகின்றனர்.