பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 11 பேர் கைது

137

 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மோப்ப நாயுடன் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த திடீர் சுற்றிவளைப்பானது நேற்று (29.12.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திடீர் சோதனை நடவடிக்கை
மேலும், மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர் பண்டார தலைமையிலான பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான நேற்று பகல் மத்தியஸ்தர் வீதியிலுள்ள பிரபல பெண் போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அண்ணாச் என அழைக்கப்படும் பெண் வியாபாரியை கைது செய்ததுடன் ஐஸ் போதை பொருளையும் மீட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையின் போது இருவரை ஐஸ் போதை பொருளுடன் கைது செய்ததுடன் அந்த பகுதியில் சந்கதேகத்துக்கு இடமாக நடமாடிய 8 பேர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.

SHARE