கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விபரம் நாளை வெளியாகும்!தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் இன்னமும் இழுபறியில்

360

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

TNA Leader at a Press Conference

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.

தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றிய ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ளன.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் இன்னமும் இழுபறியில் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை வெளியிடாமல் உள்ளது.

அத்துடன், பல்வேறு தரப்பில் இருந்தும், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள், கூட்டமைப்புத் தலைமைக்கு விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் நாளை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர், ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என்றும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

SHARE