தலவாக்கலை ட்ரூப் தோட்டத்திலிருந்து தலவாக்கலை நகரை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று 23.08.2015 அன்று மாலை 06.30 மணியளவில் ட்ரூப் தோட்ட பிரதான வீதியில் ட்ரூப் தோட்ட அண்மித்த பகுதியில் பிரதான வீதியை விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் வேனில் பயணித்த சிறு குழந்தை உட்பட 03 பேர் படுங்காயம்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மூவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வேன் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)