சிங்கள அரசியல்வாதிகள் வீடுகளுக்கும் நாயாய் -பேயாய் அலைகிறார் கருணா.

402

சிங்களவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே, நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியே வந்தேன். மேலும் யுத்த காலத்தில் சுமார் 600 தமிழ் இளைஞர்களை யுத்த முனைக்கு நான் தான் அனுப்பிவைத்தேன். அவர்கள் தான் ஊடுருவும் படையாக செயல்பட்டார்கள், என்று பல விடையங்களை தற்போது கக்கியுள்ளார் கருணா.

karuna-with-army

தன்னை MP யாக போட்டியிட அனுமதிக்கவும் இல்லை. தேசிய பட்டியலில் இடம் தந்து தன்னை மீண்டும் MP ஆக்க இருப்பதாக சில சிங்கள முன்னணி அரசியல்வாதிகள் கூறினார்களாம். அதற்கான வாக்குறுதியையும் அவர்கள் தந்தார்கள். ஆனால் இறுதியில் என்னை சரியாக ஏமாற்றிவிட்டார்கள் என்று கருணா நேற்றைய தினம் மாலை கூறியுள்ளார்.

யுத்த காலத்தில் தான் அனுப்பிய 600 பேரில் தற்போது 300 பேர் வரையில் தான் மிஞ்சியுள்ளதாகவும். இறந்து போன 300 பேருக்கும் தாமே பொறுப்பு கூறவேண்டிய கடைப்பாட்டில் இருப்பதாகவும் கருணா மேலும் புலம்பியுள்ளார். இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை சில சிறப்பு சலுகைகள் உண்டு.

அதனை இழந்துவிட்டால் இனி நாய் படா பாடு தான் படவேண்டும் என்பது கருணாவுக்கு புரியாத விடையம் அல்லவே. சிங்களவர் மீது, அதுவும் மகிந்த மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த கருணா தற்போது தான் துரோகம் என்றால் என்ன என்பதனை முழுசாக அறிந்துள்ளார். தனக்கு தேசிய பட்டியலில் MP சீட்டை ஒதுக்கி தரவேண்டும் என்று அவர் தற்போது அனைத்து சிங்கள அரசியல்வாதிகள் வீடுகளுக்கும் நாயாய் -பேயாய் அலைகிறார் என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நான் 600 பேரை போர் களத்திற்கு அனுப்பினேன் என்று கருணா பகிரங்கமாக சொல்வது ஒருவகையில் மிரட்டலே. இவர் மிரட்டுவது சிங்களவர்களை தான். அதுவும் மகிந்த பக்கம் உள்ள சிங்களவர்களை. எனக்கு பதவி இல்லை என்றால் உங்கள் வண்டவாளங்களை வெளிப்படுத்துவேன் என்று கருணா பகிரங்கமாக அறிவிக்க சிறிய காலமே உள்ளது எனலாம். புலிகளையும் பலம் இழக்கச் செய்து.

அவர்கள் அழிவுக்கும் காரணமாகி, தமிழர் போராட்டத்தையும் சிதைத்து இறுதியில் தானும் சிதைந்தான் இந்தப் பாதகன். இவன் பெயரைக் கூட தமிழ் மக்கள் தமது பிள்ளைகளுக்கு வைப்பது இல்லை. ஒரு காலத்தில் காக்கை வன்னியன் என்றால் எப்படி பட்ட துரோகி என்று அனைவராலும் அறியப்பட்டானோ, அதுபோல தற்போது கருணா என்றாலே அது துரோகத்தின் மறு பெயர் என்ற அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டது.

SHARE