பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் கவனயீர்ப்பு போராட்டம்

98

 

பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று வியாழக்கிழமை (18) நண்பகல் 12மணியளவில் நடைபெற்றுகின்றது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த முன்னெடுக்கப்படுவதுடன் அடையாளமாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், “பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு” எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE