ஊழல் புகார் ; தமிழ் வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் அமைச்சர் பதவி விலகல்!

102

 

ஊழல் வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சரும், தமிழருமான ஈஸ்வரன், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஈஸ்வரன், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். 1997-ல் முதல்முறையாக எம்.பியாக தேர்வான பிறகு, 2006 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சேரும் வாய்ப்பினை பெற்றார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு அமைச்சரவையில் இவருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது. மேலும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகப் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில், சிங்கப்பூா் எஃப் 1 காா் பந்தய விவகாரத்தில் தொழிலதிபா் ஓங் பெங் செங்கிடமிருந்து ஆயிரக்கணக்கான டொலர் மதிப்புள்ள பரிசுப் பொருட்களைப் பெற்றதாக ஈஸ்வரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவா் கூறுகையில்,

‘நான் குற்றமற்றவன். என் பெயருக்கு விளைவிக்கப்பட்டுள்ள களங்கத்தைப் போக்குவதில் இனி கவனம் செலுத்துவேன்’ என்றார்.

 

SHARE