இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்றைய தினம் (21-01-2024) அதிகாலை 3.39 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.