வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டுரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
அதிபர் மற்றும் தூதுக்குழுவினர் டுபாய் எமிரேட்ஸ் விமான சேவையின் EK650 விமானத்தில் இன்று(23) காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
உலகப் பொருளாதார மன்றத்தின் 54வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமாக ஜனவரி 13ஆம் திகதி சுவிட்சர்லாந்திற்குச் சென்றார்.
உத்தியோகபூர்வ விஜயம்
அதன் பின்னர் ஜனவரி 18ஆம் திகதி உகாண்டாவுக்குப் புறப்பட்டு, உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
பின்னர், ஜி77 மற்றும் சீனாவின் 3வது தெற்கு உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ளார்.
இவ்வாறான 10 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துகொண்டு இன்று திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.