வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

98

 

ஆனமடுவ, நவகத்தேகம பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவமானது இன்று (25.01.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் ஒரே குடும்பத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை
லபுகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் பலத்த காயமடைந்த தாய் புத்தளம் வைத்தியசாலையின் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE