கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு

96

 

குருமன்காடு கோவில் வீதி பகுதியில் இருந்து கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலமாக மீட்பு
குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டிலுள்ள கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வவுனியா காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச் சம்பவத்தில்( 29) வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

விசாரணை
இவ் மரணம் தற்கொலையா அல்லது எதிர்பாராது இடம்பெற்றதா அல்லது கொலையா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பிரிவினரின் உதவியினையும் நாடியுள்ளனர்.

SHARE