ரஜினி, கமல் இருவரும் ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்றால் பாலிவுட்டே ஒரு நிமிடம் வியந்து தான் பார்க்கும். இந்நிலையில் இவர்கள் இருவருமே மிகவும் மதிக்கும் ஒரு நபர் சிவாஜி கணேசன்.
இவருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்துள்ளது. இதற்கு கமல் ‘நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவுகோரியதில் அரசு, நடிகர் இனத்திற்க்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் ஒருவன்’ என்று அறிக்கைவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.