மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்து ஒருவர் பலி

161

 

அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்தானது நேற்று(01.03.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்மலையிலிருந்து தண்ணிமுறிப்பு வயல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அளம்பில் சந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

உயிரிழப்பு
இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி சிகிச்சை பெற்று வந்த செம்மலையை சேர்ந்த சிங்கராசா யோகராசா (வயது 54) என்பவர் இன்று(02) அதிகாலை மரணமடைந்துள்ளார்.

குமுழமுனை பகுதியிலிருந்து வந்து விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படுபவர்கள் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SHARE