எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் நாளை

327

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு தொடர்பில் கடுமையான சர்ச்சை நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 கூட்டமைப்பின் 55க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எழுத்து மூலம், ஜனாதிபதிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. நாளைய தினம் எதிர்க்கட்சித் தலைவரையும், எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரையும் நாளை நியமிப்பது என நேற்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கின்ற காரணத்தினால் அடுத்த பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க வேண்டுமென வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE