தென் ஆபிரிக்க ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜெகொப் சூமா அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்து நாடு திரும்பும் வழியில், இலங்கையில் தரையிறங்கிய போது இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தரையிறங்கிய தென் ஆபிரிக்க ஜனாதிபதியை, பிரதமர் சந்தித்து சிறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதேவேளை, சீனாவிற்கு பயணிக்கும் வழியில் இலங்கையில் தரையிறங்கிய போது அவரை வரவேற்று சிறு பேச்சுவார்த்தையில் இலங்கைள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.