பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காத மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளார்.
அமைச்சர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பிரசன்னமாகத் தவறினால் அது குறித்து ஆளும் கட்சியின் பிரதம கொறடா மற்றும் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமர்வுகளில் பிரசன்னமாகத் தவறினால், அது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பது மிகவும் பொருத்தமானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி நகர்த்தும் முனைப்புக்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பாராளுமன்ற செயற்பாடுகள் சிறந்த முறையில் நடாத்திச் செல்ல உறுப்பினர்களின் பிரசன்னம் இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.