நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதன் ஊடாக சர்வதேச சவால்களை வெற்றிகொண்டு நாட்டை முழுமையாக மாற்றியமைக்க தேசிய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது முழுப் பராாளுமன்றமும் அரசாங்கமாக மாறிவருவதாகவும் இதன்போது ரணில் தெரிவித்துள்ளார். நாட்டின் இரு பிரதான கட்சிகளும் ஆட்சியமைப்பது வலரலாற்று முக்கியத்துவம் வாயந்;தது என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை காலமும் தீர்க்க முடியாதிருந்த அடிப்படைப் பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டிய காலம் வந்துவிட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர் அதற்காகவே தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
30 வருட யுத்தம் நாட்டில் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தவில்லை என்று கூறிய அவர் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தற்போது ஜனாதிபதிக்கு சர்வதேச ஆதரவு அதிரகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.