பிரபாகரனின் மரணம் குறித்து மகிந்த அரசாங்கம் உரிய முறையில் உறுதிப்படுத்தத் தவறியுள்ளது

315
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் உரிய முறையில் உறுதிப்படுத்தத் தவறியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் மரணம் குறித்து கருணா அம்மான் ஒரு நேரத்திற்கு ஒரு கதையை கூறுகின்றார்.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த போது ஒரு கதையை கூறினார், தற்போது வேறும் ஒர் கதையை கூறுகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவராகவும், பிரதி அமைச்சராகவும் கருணா அம்மான் கடமையாற்றியிருந்தார்.

தற்போது இந்த எந்தப் பதவியும் அவருக்கு இல்லை இதனால் பிழைப்பிற்காக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

பிரபாகரனின் சடலம் என்பதனை தயா மாஸ்டரும் கருணா அம்மானும் மட்டுமே உறுதி செய்திருந்தனர்.

சடலத்தை அனுராதபுரத்திற்கு அல்லது கிளிநொச்சிக்கு எடுத்துச் சென்று நீதவான் பரிசோதனை ஒன்றை நடத்தி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை ஒன்றை அரசாங்கம் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

அதே போன்று மரபணு பரிசோதனையையும் நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு உரிய முறையில் சடலத்தை அடையாளம் கண்டு உறுதிப்படுத்தியிருந்தால் இன்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கதைகளை சொல்ல சந்தர்ப்பம் இருக்காது.

கடந்த அரசாங்கம் சடலத்தை உரிய முறையில் உறுதிப்படுத்தத் தவறிதனை ஓர் தவறாகவே நான் கருதுகின்றேன்.

ஏனென்றால் பிரபாகரன் ஓர் சமானியர் அல்ல, நீண்ட காலம் போர் செய்த இயக்கமொன்றின் தலைவராவார்.

பிரபாகரனின் மரணத்தை விஞ்ஞான ரீதியாக நிரூபித்திருந்தால் இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு கிடையாது என சிவாஜிலிங்கம் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் போன்ற விசர் பிடித்தவர்கள் கூறும் கருத்துக்களை நாம் கண்டு கொள்வதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE