இது குறித்து ஏற்கனவே ஐந்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளவர்கள் இதில் இணைய தயாராகவிருப்பதாகவும், இருப்பினும், அவ்வாறு இணையும் சந்தர்ப்பத்தில் தமது ஆசனங்களை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் அவர்கள் இருப்பதாகவும் வீரவன்ச கூறியுள்ளார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த சுமார் 40 உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவாக இல்லை எனவும், இவர்கள் எதிர்க்கட்சியில் சேரவிருப்பதாகவும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான அனுமதியினை சபாநாயகரிடமிருந்து விரைவில் பெற எதிர்பார்த்துள்ளதாகவும், எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதனை மிக இரகசியமாக வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய செயற்குழு, தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்திருந்தது, ஆனால் அது சட்டவிரோதமானது.
தேர்தல் விஞ்ஞாபனமே அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ் எதிர்க்கட்சியின் அமைப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரமாணம் நிறைவடைந்த பின்னரே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சிலர் சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதியை சந்தித்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.