யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுரம் ஸ்ரீ ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட 7 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

315

 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுரம் ஸ்ரீ ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட 7 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

jaffna_robry_003

சந்தேக நபர்களிடம் இருந்து 20 தங்கச் சங்கிலிகள் மற்றும் 4 பதக்கங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட இந்த ஏழு பேரில் 5 பேர் பெண்கள் எனவும் அவர்களில் ஒருவர் இந்திய பிரஜை எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்கள் சென்றதாக கூறப்படும் டொல்பின் ரக வான் ஒன்றையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

யாழ்.வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழாவில் 60 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த 3 இந்தியர்கள் உள்ளடங்கிய 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பருத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றய தினம் இந்த கைது இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் தேர்த் திருவிழா முடிந்து குறித்த கொள்ளை கும்பல் வாகனத்தில் பயணிக்கவிருந்த நிலையில் 20 பொலிஸார் கொண்ட விசேட குழு இந்த கைதை செய்துள்ளது.

இதன்போது கொள்ளை கும்பலிடமிருந்து ஹயஸ் வாகனம் ஒன்றும் 27 சங்கிலிகளும் மீட்கப்பட்டது. இவற்றில் 7 சங்கிலிகள் போலியானவை. மிகுதி 20 தங்க சங்கிலிகளின் மொத்த நிறை 60 பவுண்கள் என தெரிவித்திருக்கும் பொலிஸார்,

கைதானவர்களில் 3 இந்தியர்கள் உள்ளதாகவும் இவர்கள் கணவன், மனைவி, மருமகள் என்ற உறவுக்காரர்கள் எனவும் மற்றயவர்கள் 4 பேர் நீர்கொழும்பு மற்றும் அலவத்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் பொறுப்பதிகாரி ருவான் பி.நந்தநாராயண தெரிவித்தார்.

மேலும் மேலும் இந்த கொள்ளையர்கள் பக்தர்களை கீழே தள்ளிவிட்டு ஆபரணங்களை களவாடியுள்ளனர்.

இந்த கொள்ளை கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் பெண் உறுப்புக்குள் 3 சங்கிலிகளை மறைத்து வைத்திருந்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார்,

கடந்த காலத்தில் நகை கொள்ளையர்களை பிடித்தால் அவர்களிடம் நகைகள் இருப்பதில்லை காரணம் அவர்கள் நகைகளை கைமாற்றி விடுகிறார்கள்.

இதனால் இம்முறை அவதானித்துக் கொண்டிருந்து கொள்ளையார்கள் அனைவரும் இணைந்து வாகனத்தில் புறப்படவிருந்த நிலையில் 20 பொலிஸார் கொண்ட குழு கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

SHARE