பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோகத்தை எதிர்த்து வவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று ( 30.09.2015 ) ஆர்ப்பாட்டம்.
இந்நிகழ்வில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம் மத அமைப்புக்களும் மக்களும் தமது கண்டனங்களை தெரிவித்தது. மேலும் அரசே பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை அமுல்படுத்து பாலியல் வன்முறைகளை தூண்டும் விளம்பரங்களை உடனடியாக தடைசெய் என்ற கோரிக்கைகளைக் கொண்ட பதாதைகளை ஏந்திஇருந்தனர். நேற்று வித்தியா இன்று சோயா நாளை யார்????? அரசே அணுமதிக்கப்போகின்றாயா????? என்று கோசமெலுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ, வடமாகாணசபை உறுப்பினர்களான தியாகராஜா, லிங்கநாதன், நடராஜா இவர்களுடன் இணைந்து வெகுஜன அமைப்புக்கள், சர்வமத அமைப்புக்கள், தமிழ் விருட்சம் அமைப்புக்கள், ஆசிரியர் தொழிற்சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்களும் படங்களும் – ம.மனோகரன்