கொண்டயாவின் சகோரர் மரபணு பரிசோதனையில்…

330
சிறுமி சேயா சவ்தெமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சமன் ஜெயலத் என்பவர, மரபணு பரிசோதனைகக்காக ஜின்டெக் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இவர் குறித்த வழக்கு தொடர்பில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு, தானே கொலையை செய்தாக வாக்குமூலம் அளித்த, கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சமன் ஜெயலத் நேற்றைய தினம் தானே குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபருக்கு மரபணு பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்தது.

இதன்படி அவர் இன்று பொரளையிலுள்ள ஜின்டேன் நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரபணு பரிசோதனைக்கு பிறகு சிறுமி கொலை தொடர்பில் உண்மையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

sadeumi41

SHARE