வடக்கில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் செயற்திட்டம்

304
வடக்கு மாகாணத்தில் உள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள்ளாக குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கடிப்படையில் விசேட தெரிவின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 120 பயனாளிகளுக்கான தேவை, மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான திட்டங்கள் தொடர்பில் பயனாளிகளிடம் இருந்து அவர்களது தேவைகள் தொடர்பிலான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்கான உதவித்திட்டம் விரைவில் வழங்கப்படவுள்ளது.

அத்தோடு இதேபோன்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தேவை மதிப்பீடு செய்யும் கலந்துரையாடல்கள் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் திட்டமிடப்பட்டுல்லத்தான் படியாக வவுனியா மாவட்டத்திற்க்கான கூட்டம் 12-10-2015 திங்கள் அன்றும்,

மன்னார் மாவட்டத்துக்கான கூட்டம் 14-10-2015 புதன் அன்றும், கிளிநொச்சி மாவட்டத்துக்கான கூட்டம் 15-10-2015 வியாழன் அன்றும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான கூட்டம் 16-10-2015 வெள்ளி அன்றும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இவ் விசேட ஒன்றுகூடலில் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், செயலாளர் எஸ்.சத்தியசீலன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் கலந்து கொண்டனர்.

SHARE