மஹிந்தவின் செயலாளருக்கும், அனுச பெல்பிட்டவிற்கும் கடுமையான நிபந்தனை அடிப்படையில் பிணை

304

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்டவிற்கும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது.

இந்த இருவருக்கும், தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக சில் ஆடைகள் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தலா ஒரு லட்சம் ரொக்கப் பிணை மற்றும் ஒரு மில்லியன் சரீரப் பிணை அடிப்படையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரினதும் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முகவரிகளில் மாற்றம் செய்தால் அது குறித்து நீதிமன்றில் அறிவிக்க வேண்டுமென மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிணை நிபந்தணைகளை மீறிச்செயற்பட்டால் கைது செய்யப்பட்டால் சிறையில் அடைக்க நேரிடும் என நீதவான் குசலா சரோஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE