யாழில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் விஷேட கலந்துரையாடல்

316

யாழில்  தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இன்று காலை ரில்கோ விடுந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

அதன் போது தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையும் வெளியிட்டு வைக்கபப்ட்டது.

இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் கந்தையா சர்வேஸ்வரன்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , அக் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் பிரதிநிதிகள் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

SHARE