யுத்த குற்றச்சாட்டுகளிற்குள்ளாகும் படையினர் விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படாது – மங்கள

320

அரசாங்கம் உருவாக்கவுள்ள விசாரணைபொறிமுறையின் கடும்போக்கற்ற தன்மை காரணமாக யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகும் இலங்கை படையினர் விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படாது என வெளிவிவகரா அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்
யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்கள் முதலில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்நிலையில் உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து திட்டமிடப்படுகின்றது . அதன்பின்னர் அவர்கள் குறித்த வழக்கு மதத்தலைவர்கள் குழுவொன்றின் முன்னிலையில் ஆராயப்படும்,அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு மன்னிப்பை வழங்கலாம் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசியகலந்துரையாடல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் போன்றவை பூர்த்தியான பின்னரே விசாரணைபொறிமுறையின் வடிவம் மற்றும் அதில் வெளிநாட்டு பிரதிநிதித்துவம் காணப்படவேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். இந்த கலந்துரையாடல்கள் அடுத்தவருடம் ஜனவரி மாதத்திற்குள் பூர்த்திசெய்ய அரசாங்கம் விரும்புகின்றது. அரசாங்கம் ஏற்படுத்தவுள்ளது கலப்புபொறிமுறையில்லை ஆனால் அது குறித்த நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக சர்வதேசநிபுணத்துவம் அவசியம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE