யுத்தகுற்றச்சாட்டுகளிற்குள்ளாகும் படையினருக்கான சட்டத்தரணிகளையும் செலவையும் அரசாங்கம்பொறுப்பேற்கும்

320

யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகும் படையினர் சார்பில் ஆஜராவதற்கு சட்டத்தரணிகளை அமர்த்தவுள்ள அரசாங்கம் அதற்கான செலவையும் பொறுப்பேற்க உள்ளது.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த உறுதிமொழியை படையினருக்கு வழங்கியுள்ளார்.ஐக்கியநாடுகள் விசாரணை அறிக்கை தொடர்பாக முப்படையினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியும், பிரதமரும் விடுத்தவேண்டுகோள்களின் படி படையினரை சந்தித்து உரையாடிய வேளையே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்புகளின்போது ஐக்கியநாடுகள் பரிந்துரைகள் மற்றும் அது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து அமைச்சர் படையினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.அதன்போதே யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகும் படையினர் சார்பில் ஆஜராவதற்கு அரசாங்கம் சட்டத்தரணிகளை அமர்த்தும் அதற்கான செலவை பொறுப்பேற்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE