பாதுகாப்புச் செலவுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்தும் உயர்வு?

303

இலங்கையில் பாதுகாப்புச் செலவுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்தும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடவும் இந்த ஆண்டில்  அதிகளவு தொகை ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்காக 285 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், 2016ம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சிற்கு மட்டும் 306 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இந்த மாத இறுதியில் வரவு செலவுத் திட்டம் குறித்த உத்தேச பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பாதுகாப்புச் செலவில் 85 வீதமானவை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவுகளின் செயற்பாட்டுக்காக செலவிடப்பட உள்ளது.
கடந்த காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்காகவும் பெருந்தொகை பணம் செலவிடப்பட உள்ளது. இதேவேளை, ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளது.கல்விக்கான செலவுகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE