சிரிப்பழகி சினேகா நேற்று தனது பிறந்த நாளை திறன்குன்றியோர் இல்லத்தில் நேற்று கேக் வெட்டிக் கொண்டாடினார்.
அந்த இல்லத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உணவுகள் பரிமாறி கொண்டாடினர். வருடா வருடம் இதுபோல் பிறந்த நாள் கொண்டாடுவது அவரது வழக்கம்.
சமீபத்தில் சினேகா – பிரசன்னா தம்பதியருக்கு விஹான் என்ற ஆண் குழந்தை பிறந்தது அனைவரும் அறிந்ததே. குழந்தை பிறந்த பின் எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்டாமல் இருந்தார், நேற்று தான் தனது பிறந்த நாளுக்காக மனநலம் குன்றிய குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடினார்.
அந்த இல்லத்தில் பல குழந்தைகளுக்கு கேக் ஊட்டியும் உணவு பரிமாறியும் தனது உற்சாகத்தை பகிர்ந்தார். அடுத்ததாக ட்யூப் மூலமாக உணவு பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள குழந்தைகள் நிரம்பிய அறைக்குச் சென்ற சினேகா அவர்களின் நிலையைப் பார்த்ததும் தாங்க முடியாமல் கலங்கி அழுதார்.
பின் பிரசன்னா அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்.