லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் எக்நெலிகொட கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்திச் செல்லப்பட்ட எக்நெலிகொட வெலிகந்த மனம்பிட்டி என்னும் இடத்தில் காணப்பட்ட இடைக்கால இராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட எக்நெலிகொடவின் சடலம், திருகோணமலை கடற்பரப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவு தகவல்களை இதனைக் குறிப்பிட்டுள்ளன.
கொலை செய்யப்பட்ட எக்நெலிகொட முன்னதாக சொரிவில பிரதேச சகதி குழியொன்றில் புதைக்கப்பட்டதாகவும் சடலம் மேலே வந்த காரணமாக, சடலத்தை திருகோணமலை கடற்பரப்பில் வீசி எறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சொரிவில பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாம் கருணா அம்மானினாலும், பிள்ளையானினாலும் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது என தெரிவிக்கப்படுகிறது.
2010ம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த முகாம் அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளது.
எக்நெலிகொட கடத்திச் செல்லப்பட்டு சொரிவில முகாமில் ஒப்படைத்த போது, அந்த முகாமின் பொறுப்பாளராக பிள்ளையான் செயற்பட்டுள்ளார்.
இந்த முகாமில் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முக்கிய அமைச்சர் ஒருவர் இந்த விசாரணைகளுக்கு இடையூறு செய்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.